Skip to playerSkip to main content
  • 7 hours ago
நீலகிரி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளை நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைத்தார்.இந்த ஆண்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறும் 128வது மலர் கண்காட்சிக்காக பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகள் அமைத்து, பல வண்ண மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்கா மேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு, லில்லியம்ஸ் மற்றும் டேலியா போன்ற மலர் நாற்றுக்களை நடும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று துவக்கி வைத்தார்.இந்த ஆண்டு சிறப்பம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பணிகளை கவரும் வகையில் ஜெரேனியம், சைக்லமன், பால்சம் மற்றும் பல புதிய ரக ஆர்னமெண்டல் கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியா மற்றும் பிகோனியா, பெட்டுனியா போன்ற 275 வகையான விதைகள் மற்றும் செடிகளை ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விதைகள் பெறப்பட்டு, மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மலர் கண்காட்சியினை முன்னிட்டு மலர் காட்சி மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் 50 ஆயிரம் மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 

Category

🗞
News
Transcript
00:00Thanks for listening.
00:44Hello everyone, I am here in the Botanical Gardens in the Botanical Gardens.
00:50I am here in the Botanical Gardens.
00:55I am here in the Botanical Gardens.
01:00We are here in the Botanical Gardens.
01:14I am here in the Botanical Gardens.
01:19I am here in the Botanical Gardens.
01:42I am here in the Botanical Gardens.
02:05I am here in the Botanical Gardens, but I am here in the Botanical Gardens.
Comments

Recommended