மயிலாடுதுறை: மயூரநாதர் கோயிலில் மூன்றாம் நாள் மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த மாணவிகளின் ஞானசம்பந்தர் வரலாறு மற்றும் சிதம்பரம் நடராஜர் ரூபத்தின் தத்துவங்களை விளக்கும் நடனத்தை ஆடி மெய்ர்சிலிர்க்க வைத்தனர்.மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா, மயூரநாதர் ஆலயத்தில் பிப்ரவரி 12-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ஆம் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழாவில், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த திருகோணேஸ்வரர் நடன ஆலய குரு மதிவதனி சுதாகரனின் மாணவிகள் தங்கள் நடனத்தை அரங்கேற்றினர்.சிவனின் திருக்கடையூர் திருவிளையாடலான மார்க்கண்டேயர் புராணத்திலிருந்து கால சம்ஹார மூர்த்தி பற்றிய நாட்டிய நாடகத்தையும், சீர்காழி ஞானசம்பந்தர் வரலாறு மற்றும் சிதம்பரம் நடராஜர் ரூபத்தின் தத்துவங்களை விளக்கும் வகையில் அவர்கள் நடனமாடினர்.இதேபோல், சென்னை குரு ஷீலா உன்னிகிருஷ்ணனின் ஸ்ரீதேவி ருத்யாலயாவின் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் நிகழ்த்திய சிவ நவ பக்தி என்னும் நாட்டிய நாடகத்தை தத்துரூபமாக அந்தந்த பாத்திரங்களுக்கு உண்டான உடை அலங்காரத்துடன் அரங்கேற்றினர்.
Comments