Skip to playerSkip to main content
  • 1 day ago
தேனி: போடி-சென்னை இடையே வாரத்துக்கு மூன்று நாட்கள் இயக்கப்பட்ட விரைவு ரயில் சேவை, தற்போது ஆறு நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு (செவ்வாய், வியாழன், ஞாயிறு) ஆகிய நாட்களிலும், சென்னையிலிருந்து போடிநாயக்கனூருக்கு (திங்கள், புதன், வெள்ளி) ஆகிய நாட்களிலும் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது.நாள்தோறும் தேனி மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாரத்தில் ஏழு நாட்களும் ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள், ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னையில் இருந்து போடிநாயக்கனூருக்கும், போடியிலிருந்து சென்னைக்கும் வாரத்தில் சனிக்கிழமையை தவிர்த்து மற்ற ஆறு நாட்கள் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.இந்த ரயில் சேவை நேற்று முதல் தொடங்கிய நிலையில், நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட ரயில் மதுரை வழியாக இன்று காலை தேனி ரயில் நிலையத்திற்கு வந்தது. தேனி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Category

🗞
News
Comments

Recommended