Skip to playerSkip to main content
  • 3 weeks ago
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சுமார் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை இன்று (ஜூலை 12) வழக்கம்போல் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4.30 மணி அளவில் விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.மேலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். கோயிலில் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் ஆறு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இதையும் படிங்க: 33 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து | சென்னை பேருந்து நிலையங்களில் அலை மோதும் பயணிகள் கூட்டம்தொடர்ந்து பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் முடி காணிக்கை செலுத்தவும், நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடவும் சுமார் மூன்று மணி நேரம் அவர்கள் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.குறிப்பாக, ரூ. 100 கட்டணம் தரிசன வரிசையில் பல மணி நேரம் காத்திருந்ததால், இயற்கை உபாதை கூட கழிக்க முடியவில்லை, அதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்தனர். கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்து காணப்பட்டது.

Category

🗞
News
Comments

Recommended