Skip to playerSkip to main content
  • 14 minutes ago
தேனி: மலைக்கோயில் வனப்பகுதியில் காட்டுத்தீயால் அரியவகை மரங்கள் மூலிகை செடிகள் எரிந்து சேதமாகின.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தைலாராமன் மலை கோயிலை சுற்றி அரியவகை மூலிகைச் செடிகளும் மரங்களும் உள்ள வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் சமூக விரோதிகள் வைத்த தீயால் கோயிலை சுற்றி 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரியத் தொடங்கியது.கோயிலை சுற்றியுள்ள வனப் பகுதியில் பற்றிய காட்டுத் தீயால் அரிய வகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் எரிந்து சேதமாகின. ஆண்டுதோறும் கோடை காலங்களில் இந்த கோயிலை சுற்றி உள்ள வனப் பகுதிகளில் சில சமூக விரோதிகளால் தீ வைக்கப்படுவதால் மலைப்பகுதியில் உள்ள அரிய வகை மூலிகைகள் அழிந்து வருகின்றன.இயற்கை வளங்களை பாதுகாக்க கோயிலை சுற்றி உள்ள வனப்பகுதியில் தீ வைக்கும் சமூக விரோதிகளை கண்டு பிடித்து இந்து சமய அறநிலையத் துறை, கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுத்து கோயிலை சுற்றி உள்ள வனங்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Category

🗞
News
Comments

Recommended