சிவகங்கை: கியாஸ் சிலிண்டரை தாமதமின்றி விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை நகரில் பழைய நீதிமன்றம் அருகே செயல்பட்டு வரும் கியாஸ் சிலிண்டர் அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 3 நாட்களாகியும் விநியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பல முறை அலுவலகத்தை தொடர்பு கொண்ட போதும் சரியான பதில் கிடைக்காததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.இந்த நிலையில் இன்று காலை மேலூர் – சிவகங்கை நெடுஞ்சாலையில் உள்ள அலுவலகம் முன்பாக சுமார் 30-க்கும் மேற்பட்டோர் காலி சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிவு செய்தவுடன் உடனடியாக சிலிண்டர் விநியோகம் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காவல் துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி மறியல் போராட்டத்தை கைவிட செய்தனர்.
Comments