Skip to playerSkip to main content
  • 7 months ago
திருநெல்வேலி: விக்கிரமசிங்கபுரம் குடியிருப்புகளில் கடந்த 10 நாட்களாக ஜோடியாக உலா வரும் கரடிகளால் அப்பகுதி மக்கள் பீதியில் இருக்கின்றனர்.  நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளிலும், விளை நிலங்களுக்குள்ளும் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு, வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளையும் தாக்கி வருகின்றன.இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பாபநாசம் அடுத்த விக்கிரமசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான பசுக்கிடைவிளை பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இச்சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இப்பகுதியில் இரவு நேரங்களில் இரண்டு பெரிய கரடிகள் ஜோடியாக குடியிருப்புகளுக்குள் நுழைந்து சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அந்த கரடிகள், இரண்டு கார்களின் நடுவே சர்வ சாதாரணமாக சுற்றித்திரியும் காட்சி பதிவாகியுள்ளது. ஏற்கனவே அங்கு கரடிகள் பலரை தாக்கியுள்ள நிலையில், தற்போது சுற்றித்திரியும் கரடிகளால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். எனவே, கரடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Category

🗞
News
Transcript
00:00Thank you for listening.
00:30Thank you for listening.
Comments

Recommended