Skip to playerSkip to main content
  • 2 minutes ago
கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் பகுதியில் மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து சின்னத்தம்பி கும்கி யானையை வனத்துறையினர் வாகனத்தில் அழைத்து சென்றனர்.கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் அமைந்துள்ளது. இங்கு 26 யானைகள் வனத்துறையினர் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் கலிம், கும்கி ஆகிய 2 யானைகள் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றது. இதனையடுத்து, தமிழக அரசு உத்தரவின் பேரில் சின்னத்தம்பி, அரிசி ராஜா, நரசிம்மன் உள்ளிட்ட கும்கி யானைகள், காட்டு யானைகளை விரட்டி பிடிக்க அழைத்து வரப்பட்டது.இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானைகள் நடமட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனால், காட்டு யானையை விரட்டுவதற்கு ஆட்சியர் பவன்குமார் உத்தரவின் பேரில், வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி நரசிம்மன், அரிசி ராஜா ஆகிய இரண்டு கும்கி யானைகள், கடந்த 5 ஆம் தேதி வனத்துறை வாகனத்தின் மூலம் கோவை அழைத்து சென்றனர்.காட்டு யானைகள் அடர் வனப்பகுதிக்குள் விரட்டியவுடன், மீண்டும் கும்கி யானைகள் டாப்ஸ்லிப் பகுதிக்கு கொண்டு வரப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended