Skip to playerSkip to main content
  • 3 days ago
மயிலாடுதுறை: அமைச்சர் வெங்கடரமணன் பள்ளிக்கு ஆய்வு செய்ய சென்ற போது, முதலமைச்சர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என குழந்தைகள் கோரிக்கை வைத்தனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சரான, உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன், இன்று இரண்டாவது நாளாக மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை அருகே திருஇந்தளூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வெங்கடரமணன், பள்ளி குழந்தைகளுடன் உரையாடினார். அப்போது உங்களுக்கு பிடித்த நண்பர்கள் யார், உங்களுக்கு பிடித்த உணவு என்ன என்று குழந்தைகள் மொழியில் அமைச்சர் கேள்வி எழுப்பினார். உடனே சகஜமான குழந்தைகள் அமைச்சரை சூழ்ந்து கொண்டு, தங்களது விருப்பங்கள் குறித்து தெரிவித்தனர். பின்னர், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்கள் குறித்து பள்ளிக் குழந்தைகள் ஒருங்கிணைந்து, மாவட்டங்களின் பெயர்களை வரிசையாக பாடல் மூலம் பாடி காட்டினர். அப்போது அமைச்சர் குழந்தைகளை பாராட்டினார். தொடர்ந்து மழலை மொழியில் பேசிய குழந்தைகள், ”விஜய் சாரை நாங்கள் பார்க்கணும், கூப்பிட்டு வாங்க” என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு சிரித்து கொண்டே ”சரி, நேரம் கிடைக்கும் போது வருவார்” என்று கூறிய அமைச்சர், முதலமைச்சரிடம் கூறுவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து காலை உணவு திட்டத்தில் குழந்தைகளுடன் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி ஆகியோர் சேர்ந்து உணவு அருந்தினர். தொடர்ந்து பள்ளியில் இறை வணக்கத்தில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

Category

🗞
News
Transcript
00:12ohh
00:15It's a drink, it's a drink, it's a drink
00:16Eat when you get a drink
00:48That's all today, but it's what I call it.
00:51Thank you very much.
01:00My name...
01:02How about you?
01:05How about you?
Comments

Recommended