Skip to playerSkip to main content
  • 2 days ago
வேலூர்: காட்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேட்டில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் இன்று மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. இன்று காலை வேதமந்திர ஓசை மற்றும் மேளதாள முழக்கங்களும் நடுவே வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார் ஆலயத்தின் அஷ்டபந்தன நன்னீராட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூன்று நாட்களாக யாகசாலை அமைத்து வேள்விகள் நடத்தப்பட்டு, மகாபூர்ணாஹுதி நிகழ்வு சிறப்பாக நிறைவு செய்யப்பட்டது.பின்னர் புனித கலசங்கள் ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோபுர கலசங்களுக்கும், உள்ளரங்கில் உள்ள மூலவருக்கும் மற்றும் உற்சவர் சிலைகளுக்கும் புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் அப்பாஜி சுவாமிகள், துணை மேயர் சுனில், தங்கக் கோயில் நிர்வாகி பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் தாராபடவேடு, காட்பாடி, செங்குட்டை, கல்புதூர், கிளித்தான்பட்டறை, விருதம்பட்டு உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து 'கோவிந்தா' முழக்கங்களுடன் பக்தி பரவசமாக சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தி பூக்களும், யாக தீர்த்த நீரும் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

Category

🗞
News
Transcript
00:08વેંકટા ચલ નિલયમ વઈકુંટ પૂરવાસમ
00:38એંકટા ચલ નિલયમ વઈકુંટ પૂરવાસમ
00:44પંકજ નેત્રમ
00:47પરમ પવેત્રમ શંખ ચક્રધર ચિંમય રૂપાં એંકટા ચલ નિલયમ
00:59વઈકુંટ પૂરવાસમ
01:02આ આ આ આ આ આ આ આ
01:33Ryesha
01:34R Aerial
02:01તુંપુરુ નારદ ગાણ વીલોલોં વેં કટા ચલ નિલયમ વઈકુંઠ પૂર વાસમ
02:16આપ આપ આપ
Comments

Recommended