Skip to playerSkip to main content
  • 2 months ago
திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.பழனி முருகன் கோயிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய விழாக்களில் ஒன்று பங்குனி உத்திர திருவிழா. இந்த விழா இன்று திருஆவினன்குடி முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து மஞ்சள் நிறத்தில் சேவல், மயில், வேல் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் 31-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி 1 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு சென்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

Category

🗞
News
Transcript
00:00Thank you for listening.
Comments

Recommended