Skip to playerSkip to main content
  • 1 hour ago
விழுப்புரம்: ஆரோவில்லில் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக், நிதி அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள் அண்மையில் ஆரோவில்லுக்கு வருகை தந்தனர். டெல்லியில் உள்ள ISTM பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சிறப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வுப் பயணம் நடைபெற்றது.28 அதிகாரிகள் கொண்ட இந்த குழுவினர், ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள முக்கிய இடங்களான மாத்திர் மந்திர் தியான மையம், ஸ்வரம் இசை மையம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டனர். அந்த குழுவினரிடம் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவியிடம் காணொலி வழியாக கலந்துரையாடினர்.அதனைத் தொடர்ந்து, ஆரோவில் அறக்கட்டளை அதிகாரி சஞ்சீவ் ரங்கநாதன், ஆன்மா சார்ந்த தலைமைத்துவம், கோப்புகளை திறம்பட கையாளும் ஒரு நிர்வாகிக்கு இருக்க வேண்டிய உள்மனத்தெளிவு மற்றும் அர்ப்பணிப்புக்குறித்து விளக்கமளித்தார். இந்த வருகை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என மத்திய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Category

🗞
News
Transcript
00:00Thank you for listening.
00:40Thank you for listening.
01:16Thank you for listening.
Comments

Recommended