ராணிப்பேட்டை: ஜப்பான் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 108 திவ்யதேசங்களில் ஒன்றான யோகலட்சுமி நரசிம்மர் திருக்கோயில் சாமி தரிசனம் செய்தனர்.ஜப்பானிலிருந்து இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களை தரிசனம் செய்ய வந்த 70-க்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்கள் ஆன்மிகப் பயணத்தின் ஒரு பகுதியாக சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தனர். பழமையான வரலாறும் ஆன்மீக மகத்துவமும் கொண்ட இத்திருக்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.மலை மீது அமைந்துள்ள லட்சுமி நரசிம்மரை தரிசிக்க ஜப்பான் பக்தர்கள் ரோப் கார் வசதியின் மூலம் சென்று சாமி தரிசனம் செய்தனர். தரிசனத்திற்குப் பிறகு கோயில் நிர்வாகம் சார்பில் ஜப்பான் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்திய ஆன்மீக மரபுகள், கோயில் கட்டடக்கலை மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து ஜப்பானிய பக்தர்கள் கேட்டு தெரிந்து கொண்டனர். சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு வந்திருந்த தமிழக பக்தர்கள், ஜப்பானிய பக்தர்களுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
Comments