Skip to playerSkip to main content
  • 2 days ago
இடுக்கி: தேயிலை தோட்டத்திலிருந்து அறுவடை செய்யப்பட்ட தேயிலைகளை எடை மையங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் ட்ரோன் மூலம் கொண்டு செல்லும் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. RPSG குழும நிறுவனமான ஹாரிசன்ஸ் மலையாளம் லிமிடெட் (HML) கீழ் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் மூணாறுவில் லோ ஹார்ட் எஸ்டேட் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிதாக அறுவடை செய்யப்பட்ட பச்சைத் தேயிலையை, ட்ரோன் மூலம் எடை மையங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் கொண்டு செல்லும் சோதனை நடைபெற்றது. ட்ரோபோவொர்க்ஸ் என்ற நிறுவனத்துடன் உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, கள தளவாடங்களை மேம்படுத்துதல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், மனிதக் கையாளுதலைக் குறைத்தல் மற்றும் வயலிலிருந்து தொழிற்சாலைக்கு பச்சைத் தேயிலையை விரைவாகக் கொண்டு செல்வதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 10 கிலோ முதல் 20 கிலோ எடையுள்ள தேயிலை மூடைகளை கொண்டு செல்லும் முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. மேலும், சரிபார்ப்புகளுக்குப் பிறகு, வழக்கமான பச்சைத் தேயிலைக் கொண்டுசெல்லும் பணிகளுக்காக ட்ரோன்களைப் பயன்படுத்தும் முதல் தேயிலைத் தோட்ட நிறுவனங்களில் ஒன்றாக HML திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Category

🗞
News
Transcript
00:00Thank you very much.
00:38Thank you very much.
01:05Thank you very much.
01:42Thank you very much.
02:05Thank you very much.
02:38Thank you very much.
Comments

Recommended