Skip to playerSkip to main content
  • 3 months ago
தஞ்சாவூர்: கும்பகோணம் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து, தவெகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்.2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக வெற்றி பெற்ற பிறகு, மே 10 ஆம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் சேர்த்து 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், இன்று விஜய்யின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து, பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் வினோத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தில் எம்.எல்.ஏ வினோத்க்கு வாய்ப்பளித்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், வினோத்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் கும்பகோணம் கிழக்கு மாவட்ட தவெக சார்பில், உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் பட்டாசு வெடித்து அக் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.கடைசியாக திமுக ஆட்சியில் கோ.சி.மணி அமைச்சராக இருந்தார். இதன் மூலம், சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, கும்பகோணம் தொகுதி மீண்டும் அமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

Category

🗞
News
Transcript
00:27This video is brought to you by the U.S. Department of Health and Human Services.
00:30I love you, I love you, I love you, I love you
01:17I love you
Comments

Recommended