Skip to playerSkip to main content
  • 16 hours ago
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நத்தம் சிவசங்கரன், பத்தமடை பாய், மரக்கடைசல் பொருட்கள், மண்பானை, நெற்கதிர் உள்ளிட்டவற்றுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கியது. இதை தொடர்ந்து, வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நத்தம் சிவசங்கரன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தன்னுடைய வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.ஏர் உழவு இயந்திரத்துடன், மாட்டு வண்டி ஓட்டியபடி வந்து சிவசங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார். அத்துடன், தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களைப் பிரதிபலிக்கக் கூடிய காருக்குறிச்சி மண் பானை, நெல் நாற்று, அம்பாசமுத்திரம் மரச்செப்பு சாமான்கள், உலக புகழ்பெற்ற பத்தமடை பாய் ஆகியவற்றையும் அவர் கொண்டு வந்திருந்தார்.மேலும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு தேவையான கோரிக்கைகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளையும் அவர் ஏந்தி வந்திருந்தார். அப்போது அவருடன் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Category

🗞
News
Comments

Recommended