Skip to playerSkip to main content
  • 8 hours ago
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கள் இறக்கி, போதை மாத்திரை கலந்து விற்பனை செய்த இரண்டு பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் பகுதியில் கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பனை மரங்களில் பதநீர் இறக்க அனுமதி பெற்றிருந்த இருவர், அனுமதிக்கு மாறாக கள் இறக்கி, அதில் போதை மாத்திரை கலந்து விற்பனை செய்ததை கண்டறிந்தனர்.இதனையடுத்து கள் இறக்கி விற்பனை செய்து வந்த தஞ்சாவூர் தில்லை நகரை சேர்ந்த ஸ்டாலின் (64), வாண்டையார் இருப்பு பகுதியைச் சேர்ந்த புண்ணிய மூர்த்தி (62) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்து இருந்த 243 லிட்டர் கள் மற்றும் கலப்படம் செய்ய பயன்படுத்திய போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே கள் விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என சில அரசியல் கட்சியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Category

🗞
News
Transcript
00:28You
00:36We can run the сн hombres
00:37We have a good time
00:39We throw ourselves
00:40It's too hard
00:42And I think we keep up on the one
00:43We're not a little forever
00:43So much next to me
00:47We're really you're struggling
00:50We're struggling
01:04I'm going to take a look at my phone, I'm going to take a look at my phone, I'm going
01:10to take a look at my phone.
Comments

Recommended