Skip to playerSkip to main content
  • 3 months ago
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே இரு வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 44 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டத்துக்கு உட்பட்ட தொரப்பள்ளி அருகே, சணமாவு கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்காக காரில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல, பாகலூர் சாலையில் ஜி.மங்கலம் சாலை பிரிவு அருகே, கர்நாடக மாநில மாலுரைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் கர்நாடக மாநிலம் மாலூர் பகுதிக்கு பத்திரப்பதிவு செய்வதற்காக காரில் ஆவணமின்றி கொண்டு சென்ற 41 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு இரு வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 44 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Category

🗞
News
Transcript
00:25Thank you so much for joining us.
Comments

Recommended