Skip to playerSkip to main content
  • 2 months ago
திருப்பத்தூர்: சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக-ஆந்திர எல்லையில் துப்பாக்கி ஏந்தியபடி மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் தேர்தல் ஆணையம், பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான தகரகுப்பம், கொத்தூர், திம்மாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டப் பேரவை தேர்தலையொட்டி, மத்திய பாதுகாப்பு படையினர், மற்றும் திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் பறக்கும் படையினர் துப்பாக்கி ஏந்திய படி அந்த வழியாக செல்லும் வாகனங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Category

🗞
News
Transcript
00:00I'm sorry, I'm sorry, I'm sorry, I'm sorry.
Comments

Recommended