Skip to playerSkip to main content
  • 7 hours ago
காஞ்சிபுரம்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி சினேகா ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாடு அறையை இன்று ஆய்வு செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், திருப்பெரும்புதூர் (தனி), உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் உட்பட 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,96,052 வாக்காளர்களும் 431 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. திருப்பெரும்புதூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 3,75,921 வாக்காளர்களும் 435 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 2,43,922 வாக்காளர்களும் 321 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,76,299 வாக்காளர்களும் 358 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பிற்காக 36 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 36 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூன்றாகப் பிரித்து அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரி சினேகா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாடு அறையை இன்று ஆய்வு செய்தனர்.

Category

🗞
News
Transcript
00:00...
00:02...
00:05...
00:06...
00:11...
Comments

Recommended