Skip to playerSkip to main content
  • 3 weeks ago
திண்டுக்கல்: கொடைக்கானலில் சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் குதிரைகள் மூலம் எடுத்த சென்றனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது வெள்ளை கெவி கிராமம். இந்த கிராமத்தில் பல வருடங்களுக்கு மேலாக சாலை வசதி இல்லாததால், ஒவ்வொரு முறையும் வாக்குப்பதிவு இயந்திரத்தை குதிரை மூலமாக எடுத்துச் செல்கின்றனர். இம்முறையும் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தேர்தல் திருவிழாவில் பங்கேற்பதற்காக, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் என மொத்தம் 10 நபர்களைக் கொண்ட குழு, வாக்கு இயந்திரங்களை குதிரையில் ஏற்றிக்கொண்டு வட்ட கானல் பகுதியில் இருந்து வெள்ளை கெவி கிராமத்துக்கு இன்று பத்திரமாக கொண்டு சென்றது.தற்போது அங்கு ஆண்கள் 136 மற்றும் பெண்கள் 116 என மொத்தம் 252 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.2026 சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப். 23) நடைபெறவுள்ள சூழலில், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரமும் நிறைவடைந்தது.

Category

🗞
News
Comments

Recommended