அரியலூர்: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கான சரிபார்க்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரிபார்க்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பெட்டக வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.இதில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 320 வாக்குச்சாவடிகளுக்கான பெட்டிகள் மற்றும் கூடுதலாக 20% பெட்டிகள் கொண்டுவரப்பட்டு அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் இயந்திரங்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்படும் எனவும், அதுவரை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பு இருக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Comments