தென்காசி : மேளதாளங்கள் முழங்க வெள்ளை குதிரையில் வந்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மனு தாக்கல் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் கடந்த சில நாட்களாக தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில், தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக ஆவுடையனூர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் போட்டியிடுகிறார். இவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக வெள்ளை குதிரையில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து தென்காசி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான வைஷ்ணவி பாலிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தென்காசி பகுதியில் அறிந்த முகமான ராம் குமாரின் இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவர் மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளார்.இதையும் படிங்க : ஈரானில் தவித்த 345 மீனவர்கள் சிறப்பு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர்
Comments