Skip to playerSkip to main content
  • 3 minutes ago
தஞ்சாவூர்: த.மா.கா வேட்பாளர் எம்.கே.ஆர். அசோக்குமாருக்கு எப்படி கை கூப்பி வணக்கம் தெரிவிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி ஆர்.கே. பாரதிமோகன் கற்றுக் கொடுத்தார்.வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கும்பகோணம் தொகுதி வேட்பாளராக எம்.கே.ஆர். அசோக்குமார் நேற்று கட்சி தலைவர் ஜி.கே.வாசனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.இன்று தமாகா வேட்பாளர் எம்.கே.ஆர். அசோக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.சங்கர், பாஜக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் தங்க கென்னடி, அதிமுக தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே பாரதிமோகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி மற்றும் தமாகா நிர்வாகிகளுடன் கும்பகோணம் உச்சிப் பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ஜி.கே மூப்பனார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அங்கிருந்தே வேட்பாளர் எம்.கே.ஆர் அசோக்குமார், தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தனது பிரச்சார பயணத்தை தொடங்கினார். முன்னதாக, புதிய வேட்பாளராக களம் காணும் தமாகாவின் எம்கேஆர் அசோக்குமாருக்கு, அதிமுக தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மயிலாடுதுறை தொகுதி எம்.பி.யுமான ஆர்கே பாரதிமோகன், பொது மக்களிடம் வாக்கு கேட்கும் போது, எப்படி கை கூப்பி வணக்கம் தெரிவிக்க வேண்டும் என கற்றுக் கொடுத்தார்.

Category

🗞
News
Comments

Recommended