Skip to playerSkip to main content
  • 21 minutes ago
சென்னை: 100% வாக்கு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, 6 பேர் கொண்ட ஆழ்கடல் பயிற்சியாளர்கள் 60 அடி ஆழத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், '100% வாக்கு அளிக்க வேண்டும். வாக்களிப்பது நமது கடமை' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று (மார்ச் 28) சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஆழ் கடலில் இறங்கி 100 சதவீதம் வாக்கு, வாக்களிப்பது நமது கடைமை, வாருங்கள் வாக்களிப்போம், ஜனநாயகம் காப்போம் என்பதை வலியுறுத்தி சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள கடலில் 60 அடி ஆழத்தில், 6 ஆழ்கடல் பயற்சியாளர்களை கொண்டு, கடலுக்குள் வாக்கு அளிப்பது போன்று வாக்களித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக வீடியோ எடுக்கப்பட்டது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Category

🗞
News
Transcript
00:00Thank you for listening.
Comments

Recommended