Skip to playerSkip to main content
  • 6 weeks ago
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட இருந்த 37 அரிசி மூட்டைகளை நகர காவல்துறையினர் பறிமுதல் செய்து குற்ற புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பஷீராபாத் பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் வழங்கும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருவதாக வாணியம்பாடி நகர காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த ரகசிய தகவலின் பேரில் நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அங்குள்ள ஒரு தனியார் இடத்தில் 37 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த போலீசார், குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு அதிகாரிகளை வரவழைத்து ஒப்படைத்தனர். மேலும் அங்கு ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Category

🗞
News
Transcript
00:00Thank you very much.
Comments

Recommended