திருநெல்வேலி: வாகன தணிக்கையின் போது நெல்லையில் இருந்து சென்னை கொண்டு செல்லப்பட்ட கணக்கில் வராத சுமார் 2000 பம்பரங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலையில் நெல்லை சந்திப்பு உடையார்பட்டி பகுதியில் நடைபெற்ற வாகன தணிக்கையின் போது தனியார் லாரி சர்வீஸ் மூலம் திருநெல்வேலி இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட கணக்கில் வராத இரண்டு மூடைகளில் இருந்த சுமார் 2000 பம்பரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மேலப்பாளையம் சாலையில் வாகனத்தணிக்கையின் போது கணக்கில் வராத ரூபாய் 70 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீதரப்பநல்லூர் வாகன சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை நடத்திய அதிரடி தணிக்கையில் ரூபாய் 54,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை அங்கு மொத்தமாக 15 லட்சத்தில் 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Comments