Skip to playerSkip to main content
  • 6 weeks ago
தஞ்சாவூர்: அரசு பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவன் இறந்த தனது தந்தையின் காலில் விழுந்து கதறி அழுதபடியே ஆசீர்வாதம் பெற்று சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை சேர்ந்த ராஜ் என்ற அந்தோணிராஜ் - சத்யகலா தம்பதியின் மகன் சாய் நிஷாந்த் (17). இவர் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு (பயோ மேக்ஸ் குரூப்) படித்து வருகிறார். தற்போது தமிழகம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் சாய்நிஷாந்தின் அப்பா ராஜ் என்ற அந்தோணிராஜ் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.இந்நிலையில் அவரது உடல் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதையடுத்து மாணவர் சாய்நிஷாந்திற்கு இன்று வேதியியல் தேர்வு, காலையில் தேர்வு தொடங்க உள்ள நிலையில் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய்நிஷாந்த் தன் தந்தையின் சடலம் வீட்டில் இருக்கும் நிலையில் இன்று வேதியியல் தேர்வு எழுதுவதற்கு பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு வந்தார். தேர்வு எழுத செல்வதற்கு முன்பு இறந்த தனது தந்தையின் காலில் விழுந்து கதறி அழுதபடியே ஆசீர்வாதம் பெற்றார். பள்ளிக்கு வந்த மாணவன் சாய்நிஷாந்தை பார்த்த அவரது சக நண்பர்கள் கட்டியணைத்து அழைத்து சென்றனர்.

Category

🗞
News
Transcript
00:00Thank you very much.
00:39Thank you very much.
01:44Thank you very much.
Comments

Recommended