Skip to playerSkip to main content
  • 15 minutes ago
தருமபுரி: சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளுக்குப் பிறகு கலசப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு முதன் முறையாக பேருந்து வசதி செய்து தரப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரூர் அருகே உள்ள சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட கலசப்பாடி, அரசநத்தம், நைனாவளைவு, புளியமரத்து வளைவு, கோட்டக்காடு, அக்கரக்காடு, தரிசுக்காடு, ஆலமரத்து வளைவு, கருக்கம்பட்டி ஆகிய மலை கிராமங்களுக்கு சாலை வசதியில்லாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை வசதி வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நாடு சுதந்திரம் பெற்று 78 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக தார்சாலை அமைக்கப்பட்டது. அதே போல் அரூர் முதல் கலசப்பாடி மலை கிராமம் வரை போக்குவரத்துக்காக இரண்டு சிற்றுந்துகளை (மினி பேருந்து) மாவட்ட ஆட்சியர் ஆர்.சதீஷ் மற்றும் எம்பி ஆ.மணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சதீஷ், எம்பி ஆ.மணி, அரசு அதிகாரிகள் பொதுமக்களுடன், கலசப்பாடி மலை கிராமம் வரை பேருந்தில் பயணித்தனர். கலசப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு தார்சாலை அமைக்கப்பட்டு, பேருந்து வசதி கிடைத்ததால், பொதுமக்கள் இனிப்புகள் வழங்கியும், முதன் முறையாக தங்கள் கிராமங்களுக்கு சிற்றுந்துகளில் பயணித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Category

🗞
News
Transcript
00:00Oh
00:07Oh
00:08Oh
00:08Oh
00:34Super
00:35Super
00:36Super
00:37Super
00:37Super
00:38Super
00:52Super
00:53Super
00:54Super
00:56Super
00:57Super
00:57Super
00:58Super
01:02Super
01:054
01:07Scary
01:13I don't think I'll take you home, right?
01:17I don't think I'll take you home, right?
01:19Hello!
Comments

Recommended