Skip to playerSkip to main content
  • 4 months ago
இடுக்கி: கேரளாவின் இடுக்கியில் பெய்த கனமழையில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.  இதில், தென்காசி, தேனி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்து வருகிறது.இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி பகுதிகளை ஒட்டியுள்ள கேரள மாநிலம் இடுக்கியில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையில், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதில், நெடுங்கண்டம் அருகே உள்ள கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.  இதில், வேனில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது, இந்த வேனை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனை அப்பகுதியில் இருந்த மக்கள் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Category

🗞
News
Transcript
00:00www.fema.com
Comments

Recommended