Skip to playerSkip to main content
  • 5 months ago
கோயம்புத்தூர்: இந்து முன்னணி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களால் செல்வ விநாயகர் சிலை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இந்துக்களின் முதன்முதல் கடவுளாக இருப்பவர் விநாயகர். அந்த வகையில் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. கோவையிலும் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக ரத்தினபுரி பகுதியில் இந்து முன்னணி சார்பில் செல்வ விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பம்சமாக விநாயகர் சிலையை சுற்றி ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் மதிப்பிலான ரூ.10 முதல் ரூ.200 வரையிலான ரூபாய் நோட்டுகள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலையை அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்து வருகின்றனர்.

Category

🗞
News
Transcript
00:00I
00:07I
00:11I
00:15I
00:17I
00:20I
00:22I
00:24I
00:26I
00:28I
00:30I
00:32I
00:34I
00:36I
00:38I
00:40I
00:42I
00:44I
00:46I
00:48I
00:50I
00:52I
00:54I
00:56I
00:58I
01:00I
01:02I
01:04I
01:06I
01:08I
01:10I
01:12I
01:14I
01:16I
01:18I
01:20I
01:22I
Comments

Recommended