தஞ்சாவூர்: மஹா சிவராத்திரியை முன்னிட்டு சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.தஞ்சாவூர் பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேஷன் மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா தஞ்சை பெரியகோயில் அருகில் பெத்தண்ணன் கலையரங்கில் நடைபெற்றது. தினமும் மாலை 6.30 முதல் இரவு 9 வரை பரத நாட்டியம், மோகினியாட்டம், கதக், ஒடிசி, குச்சிப்புடி ஆகிய நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.இதில் சுவிட்சர்லாந்து, இலங்கை, மலேசியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், மைசூரு, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலிருந்தும், தஞ்சாவூா், கடலூர், சேலம், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பல்வேறு நாட்டியப் பள்ளிகளிலிருந்து 200 க்கும் மேற்பட்ட நடனக் கலைஞா்கள் பங்கேற்று நடனமாடுகின்றனா்.நேற்றைய நிகழ்ச்சியில் சுவிட்சர்லாந்து மதிவதனி சுதாகரன், ஆஸ்திரேலியா தமயந்தி பால்ராஜ், இலங்கை திவ்யா சுஜன், பெங்களூரு ஆக்சா தேசாய், தஞ்சாவூர் வைதேகி ரவிசங்கர் ஆகிய குழுவினரின் பரத நாட்டியம், கதக் ஆகிய நடனங்கள் நடைபெற்றது. இவ்விழா வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Comments