Skip to playerSkip to main content
  • 11 hours ago
திருப்பத்தூர்: எருது விடும் விழாவில் பங்கேற்ற காளை ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோயில் கிராமத்தில் 6-ம் ஆண்டு எருது விடும் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அதில் கலந்து கொண்ட காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது.சீறிப் பாய்ந்து ஓடிய காளைகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறைந்த விநாடியில் சென்றடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 1 லட்சம் , இரண்டாம் பரிசாக 80 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 60 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக 51 பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசுத்தொகை ரூபாய் 1 லட்சத்தை ஜோலார்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் சத்யா சதீஷ் வழங்கியிருந்தார். இந்த எருது விடும் திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் என கண்டு களித்தனர்.மேலும், எருது விடும் விழாவில் அசம்பாவிதங்கள் தடுக்கும் வகையில் மகாலட்சுமி தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த எருது விடும் விழாவில் பங்கேற்ற காளை ஒன்று, திடீரென வழித்தவறி ஓடி, அப்பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்ற போது, அங்கு சாலையோரம் நின்றிருந்த லாரி மீது காளை மோதியதில் காளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Category

🗞
News
Comments

Recommended