வளமான விவசாய நிலம், சாயக்கழிவு கலந்த நொய்யல் ஆற்றுத் தண்ணீரால் வீணானது. அதற்காகச் சோர்ந்துவிடாமல், மாட்டுக் கல்செக்கு அமைத்து, எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறார் செல்வன். கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பிண்ணாக்கு உற்பத்தி செய்து விற்பனையில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்.