" என் அம்மா என்னை ஈன்றவளே கவிதைகளில் உனை வடிக்க வார்த்தைகள் இல்லை என்னிடம் காதலை கவிதைகளாக சொல்ல ஒரு சில பொய்கள் போதும் அம்மா...!!!
" அம்மா என் உயிரின் மூலமே உன் பெருமை சொல்ல இன்னொரு யுகமும் சேர்ந்து பிறக்க வேண்டும் நான்...!!!
" என் அம்மா பாஷைகளின் அழியாத மொழியாக அன்பு என்னும் வார்த்தையில் அர்ச்சனை மந்திரமாக அறிவையூட்டும் ஆசானியாக இருந்திருக்க வேண்டிவளே என்னை தவிக்க விட்டுச் சென்றதேனம்மா?...!!!
" என் அம்மா நீ இல்லாத இவ்வலகில் நான் படும் அவஸ்தைகள் அறியாயோ அம்மா?...!!!
" என் அம்மா பாசம் என்னும் ஒரு வார்த்தைக்காக பல படிகள் ஏறி தோற்றுவிட்டேன் என்நிலை அறிந்து ஆறுதல் சொல்ல யாருமில்லை அம்மா எனக்கு...!!!
" என் அம்மா பாசம் என்னும் பேரில் வேசம் காட்டும் பல ஆத்மாக்கள் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள் இருந்தும் அம்மா உன் அன்புக்கு ஈடு இணை யார் இவ்வுலகில்...!!!
" என் அம்மா என்னால் முடியவில்லை என்னை அரவணைத்து கொள் உன்னுடன் சொர்க்கமான உன்னுடன் சொர்க்கத்திலாவது ஒன்றாக வாழ்வோம் அம்மா நிரந்தரமாக...!!!
- உன் பிள்ளை
பா உ . பாலா
* " அம்மா என் தாயே "...!!!
" அம்மா என் நினைவில் உன் முகம் மறந்தேன் - தாயே கனவிலாவது வந்துவிடு என் தாயே...!!!
" அம்மா மீண்டும் ஒருமுறை வாழ்ந்திட வேண்டும்...!!!
" அம்மா உன் மடியில் எனக்கு மரணமும் வேண்டும்...!!!
" அம்மா உன் கைகள் பிடித்து நடந்த காலங்கள் மறந்தேன் என் தாயே...!!!
" அம்மா என் கண்ணீர் துடைத்த உன் கைகளை இழந்தேன் என் தாயே...!!!
" அம்மா எத்தனை பிறவிகள் நான் எடுப்பினும் அத்தனை பிறவியும் நீயே என் தாயாக வந்துவிடு...!!!
" அம்மா ஆண்டுகள் ஜந்து ஆகியும் கூட நேற்று வாழ்ந்தாற்போல் இன்னும் என் நெஞ்சில் உன் பல நினைவுகள் என் தாயே...!!!
" அம்மா வீட்டு முற்றத்தில் நிலாச் சோறு...!!!
" அம்மா உன் பட்டு மடியில் தாலாட்டு...!!!
" அம்மா தம்பி, பெரியவன், செல்லம் என்ற உன் அணைப்பு...!!!
" அம்மா சில சமயம் - நீ அருகிலிருப்பதாய் உணர்கிறேன் என் தாயே - என் கண்கள் திறக்க மறுக்கின்றேன்...!!!
" தாயே...!!! " பெற்றவள் உன் தூய அன்புக்கு நிகர் யார் இவ்வுலகில் என் தாயே...!!!