Skip to playerSkip to main content
  • 5 years ago
விருதுநகரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு விருதுநகர் இளைஞர் காங்கிரஸ் சார்பாக மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மீனாட்சி சுந்தரம், மாயக்கண்ணன் ஆகியோர் தலைமையில் அவரது திருஉருவப்படத்திற்கு கட்சித் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு தலைமைப் பண்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது இந்த பயிற்சி வகுப்பில் தலைமைப் பண்பு குறித்து முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் வடிவேல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் வேணுகோபால், முன்னாள் ஒய்வு பெற்ற பத்திரப் பதிவாளர் காந்தி ராஜன், ஆகிய மூவரும் இளைஞர்களுக்கு சிறப்புரை வழங்கி, பயிற்சி கொடுத்தனர். இந்த நிகழ்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், மற்றும் மாயக்கண்ணன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் இந்த நிகழ்சியில்
காங்கிரஸ் நகர தலைவர் வெயிலு முத்து, பொம்மு ராஜ் ,முன்னாள் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்

Category

🗞
News
Comments

Recommended