கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக ரோஜா சாகுபடி செய்து அசத்தி வரும் பட்ட்தாரி இளைஞர் - அரசின் 50 % மானியத்துடன் பசுமை குடில் அமைத்து முழுவதுமாக வெப்பத்தை குறைத்து ரோஜா சாகுபடி - மாதம் ரூ 50 முதல் 60 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி அசத்தல்
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், தளவாபாளையத்தை சார்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு என்று அக்கிராமத்தில் 12 ஏக்கர் சிவசாய நிலம் உள்ளது. இதில் தென்னை மற்றும் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இதில் ஒரு பகுதியில் தேக்கு மரமும் வளர்த்து வந்துள்ளார். எம்.எஸ்.சி பட்டதாரியான பழனிச்சாமியின் மகன் பிரவீன்குமார், தந்தையின் விவசாய ஆர்வத்தை பார்த்து அவரும் விவசாயம் சாந்த தொழில் ஈடுபட்டு வந்தார். தேங்காய் நார் உற்பத்தி செய்து அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வந்துள்ளனர். அப்போது, வெள்ளரிக்காய் வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால், பாலி ஹவுஸ் எனும் பசுமை குடில் ரோஜா வளர்க்க திட்டமிட்டுள்ளார். அதற்காக தோட்டக்கலைத் துறை அதிகாரிகளை சந்தித்து தன் ஆர்வத்தை தெரிவித்துள்ளார். அவர்களின் வழிகாட்டுதலின்படி பயிற்சி முடித்ததுடன், சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் பாலி ஹவுஸ் அமைக்கப்பட்டது. இதில் 8 லட்சத்து 19 ஆயிரம் தொகையை தமிழக அரசு மானியமாக வழங்கியுள்ளது. சொட்டு நீர் பாசனம், சாரல் போன்று தண்ணீரை தெளிக்கும் ஃபோஸ்சர் முறையும் அமைக்கப்பட்டது. சுமார் 2000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பசுமை குடிலில் 10 ஆயிரம் ரோஜா செடிகளை ஒசூரில் இருந்து வாங்கி கொண்டு வந்து நட்டு பராமரித்துள்ளனர். பகல் நேரங்களில் கடுமையான வெயில் அடிக்கும் கரூர் மாவட்டத்தில் ரோஜா பயிரிடுவது என்பது சாத்தியமில்லை என பலரும் கூறிய நிலையில் தன்னம்பிக்கையுடன் ரோஜா பயிரிட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார் பிரவீன் குமார். ரோஜா செடியை பசுமை குடியில் வளர்ப்பதன் மூலம் மற்ற பகுதிகளை விட சுமார் 3 டிகிரி வெப்பம் குறைய வாய்ப்பு இருப்பதால் தான் இது சாத்தியம் என்கிறார் பிரவீன் குமார். சுமார் 10 ஆயிரம் ரோஜா செடிகளில் இருந்து வாரத்திற்கு 3 முறை பூக்களை பறித்து பொக்கே செய்பவர்கள், மேடை அலங்காரம் செய்பவர்களுக்கு கரூர் மற்றும் கோவைக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவிக்கின்றார். மேலும், பெரிய ரக ரோஜா மலர்களை ஏற்றுமதியாளர்களுக்கு விற்பனை செய்து விடுவதாக கூறுகின்றார். பெல்ஜியம் வெரைட்டி எனும் தாஜ்மஹால் ரோஜா வகைகளில் சிகப்பு நிற ரோஜாக்கள் மட்டுமே விற்பனை செய்வதாகவும், ஒரு முறை 1000 முதல் 1500 ரோஜாக்களை அறுவடை செய்வதாகவும், வாரத்திற்கு 3 முறை இது போன்று அறுவடை செய்வதால் மாதம் 50 முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈடுவதாகவும் தெரிவித்தார். 25 செண்ட் நிலத்தில் 10 ஆயிரம் ரோஜா செடிகள் வளர்க்கப்பட்ட நிலையில், அடுத்து மீதமுள்ள 25 செண்டில் 10 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்ய தயாராகி வருகிறார். இங்கு பறிக்கப்படும் ரோஜாக்கள் அனைத்தும் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனையாளர்களுக்கு கொடுக்கப்படுவதால் அவர்களுக்கு கூடுதல் லாபமும், நமக்கு போதிய வருவாயும் கிடைப்பதாக பிரவீன் குமார் தெரிவித்தார்.
பேட்டி - பிரவீன் குமார், ரோஜா செடி வளர்ப்பவர் (விவசாயி)
Comments