Skip to playerSkip to main content
  • 5 years ago
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் காயம் ஒரு அறை சேதம் இருவருக்கு லேசான காயம்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் அச்சங்குலத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான குரு ஸ்டார் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. டி.ஆர்.ஓ உரிமம் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் 15க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலையின் போது ஏற்படும் உராய்வினால் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் திடீரென தீப்பிடித்தது. இதில் வேலை செய்துகொண்டிருந்த அச்சங்குளம் சகாயராஜ் என்பவரது மகன் மற்றும் நடுசுரங்குடியை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் ஆரோக்கியராஜ் (38) ஆகிய இருவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட அறை சேதமடைந்தது. உடனே தீ விபத்து குறித்து சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கதிரேசன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீக்காயம் பட்டவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Category

🗞
News
Comments

Recommended