Skip to playerSkip to main content
  • 8 years ago
என் தந்தையார் தொண்ணூறு உரூபாய் திங்களூதியம் பெற்று வாழ்ந்தபோது ஐந்து பத்து என்று பணம் சேர்த்து விரும்பி வாங்கியவை மூன்று பொருள்கள். இராலி மிதிவண்டி, நெல்கோ வானொலி, ஒரு கைக்கடிகாரம். அப்போது எங்கள் வீட்டிலிருந்த இருபதாம் நூற்றாண்டின் நாகரிகக் கருவிகள் அவை. எல்லார் வீட்டிலும் பிலிப்ஸ் / மர்பி வானொலி இருக்கையில் அவர் அப்போதைய புது வரவான நெல்கோவைத் தேந்தெடுத்தார். அவ்வானொலிப் பெட்டியின் அன்றைய விலை அறுநூற்று ஐம்பது. ஒரு பவுன் தங்கம் நூற்றுக்குக் குறைவாக விற்ற காலம். எனில் ஒரு வானொலிப் பெட்டியின் விலை ஏழு பவுன் தங்கத்துக்கு நிகர். இன்றைய மதிப்பில் ஒன்றரை இலட்சம் உரூபாய். அந்த வானொலிப் பெட்டிக்கு ஒரு பதிவுச் சான்றிதழும் இருந்தது. நெல்கோ வானொலியில் செய்தி கேட்பது ஒன்றே எந்தையின் விருப்பம். அவர் பணிக்குச் சென்றதும் அது என் தாயாரின் திருகலுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும். கோவை, திருச்சி, இலங்கை வானொலி நிலையங்களைத் தொடர்ந்து ஒலிபரப்பிக்கொண்டிருக்கும். கோவை வானொலியின் காலை எட்டரை மணிப் பாடல்களின்போது பள்ளிக்குச் செல்வேன். 'கோவில்மணி ஓசைதன்னைக் கேட்டதாரோ...?' என்று காலைப்பாடல் ஒலிக்கும். மாலையில் திரும்பி வரும்போது இலங்கை வானொலி 'வான் மேகங்களே... வாழ்த்துகள் பாடுங்கள்...' என்னும்.

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended