Skip to playerSkip to main contentSkip to footer
  • 7 years ago
குடிகாரர்களின் அட்டகாசமும், வன்முறைகளும் பெருகி கொண்டே வருகிறது. குடி குடியை கெடுக்கும் என்பது நாளுக்கு நாள் நூற்றுக்கு நூறு நிரூபணமாகி கொண்டே வருகிறது. குடியால் சீரழிந்த ஒரு குடும்பத்தின் சம்பவம் இது.

தூத்துக்குடி தாய் நகர் சிலோன் காலனியை சேர்ந்தவர் மோட்ச ராணி. இவரது கணவர் சண்முகசுந்தரம். இவருக்கு முக்கியமான வேலையே காலையில் எழுந்ததும் மது குடிப்பதுதான். எங்கேயும் வேலை வெட்டிக்கு போவது கிடையாது. மனைவிதான் வேலைக்கு செல்வார். கடற்கரையில் மீன் வெட்டிக் கொடுக்கும் வேலைதான் மனைவிக்கு குடும்பம் நடத்த உதவுகிறது. இந்த பணத்தை குடிப்பதற்கு மனைவியிடம் கேட்பார் சண்முகசுந்தரம்.

Category

🗞
News

Recommended