பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பொதுவில் சமூக விஷயங்களைப் பற்றிப் பேசுவதோடு, படத்திலும் சமூக நோக்கம் கொண்ட கருத்துகளைச் சொல்வார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான 'பேட்மேன்' படம் இப்படியொரு விஷயத்தைப் பேசியது. தற்போது 'கேசரி' படத்தின் ஷூட்டிங்கிற்காக மஹாராஷ்டிராவின் சடாரா பகுதியில் இருக்கும் கிராமத்தில் இருக்கிறார். அந்தப் பகுதியில் பிம்போடு பட்ரக் எனும் கிராம மக்களுக்கு உதவி செய்யும் விதமாக 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
அந்தக் கிராமத்தில் மழைநீரைச் சேகரிக்க குளம் வெட்டுவதற்காக இந்தப் பணத்தைக் கொடுத்து உதவி செய்துள்ளார் அக்ஷய். மேலும், படத்தின் ஷூட்டிங்கை சிறிதுநேரம் நிறுத்திவிட்டு கிராமத்து மக்களோடு இணைந்து மண்வெட்டியை எடுத்துக்கொண்டு களத்திலும் இறங்கி இருக்கிறார். கடும் வறட்சியால் அவதியுற்றிருந்த அந்தக் கிராமத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட 10,000 மக்களும் அக்ஷய் குமாரின் இந்த உதவியால் மகிழ்ந்துபோயுள்ளனர். அதுபோக, அக்ஷய் பேசிய பேச்சு அவர்களை நெகிழச் செய்துள்ளது.
Bollywood actor Akshay Kumar has donated Rs 25 lakh to help the villagers. He also stopped shooting for some time and took the hoe along with the villagers.
Be the first to comment