Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
கிட்டத்தட்ட 5 ஆண்டு கால அஞ்ஞாதவாசத்துக்குப் பிறகு நடிக்க வந்த வடிவேலு, கொடுத்த கால்ஷீட்படி நடித்துத் தராமல் சொதப்பியதால் இயக்குநர் ஷங்கர் உள்பட 3 தயாரிப்பாளர்கள் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்தில் வடிவேலு மீது புகார்களும் அளித்துள்ளனர்.
இயக்குநர் ஷங்கர் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி' என்ற பெயரில் தயாரிக்க திட்டமிட்டார். இதில் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தனர். சிம்பு தேவன் இயக்குவதாக இருந்தது. இதற்காக சென்னையில் பல கோடி ரூபாய் செலவில் அரங்கமெல்லாம் அமைத்தனர். ஆனால் படக்குழுவினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வடிவேலு நடிக்க மறுத்துவிட்டார். இதனால் படம் நின்று போனது. வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து நடிகர் சங்கம் மூலம் வடிவேலுவிடம் விளக்கம் பெறப்பட்டது. இந்த நிலையில் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் ஆர்.கே. மற்றும் ஸ்டீபன் ஆகியோரும் புகார் அளித்துள்ளனர். ஆர்.கே. ‘எல்லாம் அவன் செயல்', ‘அழகர்மலை', ‘புலிவேஷம்', ‘என்வழி தனி வழி', ‘வைகை எக்ஸ்பிரஸ்' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர். அழகர் மலையில் வடிவேலுதான் மெயின் காமெடியன். இவர் புதிதாக ‘நீயும் நானும் நடுவுல பேயும்' என்ற படத்தை தயாரிக்க இருந்தார். இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்து இருந்தார். இதற்காக அவருக்கு ரூ.75 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்புக்கு வடிவேலு வரவில்லை என்று ஆர்.கே. புகார் கூறியுள்ளார்.

3 producers including Director Shankar have lodged complaints on Vadivelu for not honouring his call sheets.

Category

🗞
News

Recommended