டார்வினின் பரிணாமக் கோட்பாடு அறிவியல் ரீதியாக தவறானது என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் சத்யபால் சிங்கிடம் நடிகர் பிரகாஷ் ராஜ் நறுக்கென்று கேள்வி கேட்டுள்ளார். டார்வினின் பரிணாமக் கோட்பாடு அறிவியல் ரீதியாக தவறானது என்று மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். பூமியில் மனிதன் எப்பொழுதுமே மனிதனாகவே இருந்துள்ளான். குரங்கில் இருந்து மனிதன் வந்ததாக நம் முன்னோர்கள் தெரிவிக்கவில்லை என்று சிங் கூறியுள்ளார். ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளனர். குரங்கில் இருந்து மனிதன் வந்ததை நம் முன்னோர்கள் காணவில்லை என்கிறார் அமைச்சர். ஆனால் தற்போது மனிதன் குரங்காக மாறி பழையதை கிளறி கற்காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல முயற்சிப்பதை உங்களால் மறுக்க முடியுமா சார். சும்மா கேட்கிறேன் என்று ட்வீட்டியுள்ளார் பிரகாஷ் ராஜ். பிரேக்கிங்- டார்வின் கோட்பாட்டுக்கு எதிராக குரங்குகள் போராட்டத்தில் குதித்துள்ளன. மனிதர்களுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்று அவை தெரிவித்துள்ளன என பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் சத்யபால் சிங்கை கலாய்த்துள்ளார்.
Actor Prakash Raj has slammed union minister Satyapal Singh who said that Charles Darwin's Theory of Evolution is wrong. Prakash Raj tweeted that,“ our ancestors have not seen ape evolving in to man” says minister. But dear sir,..can you deny that we are witnessing..the reverse....man evolving into ape by digging the past and trying to take us back into STONE AGE......#justasking'