Skip to playerSkip to main content
  • 8 years ago
என் அத்தையார் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற மறுநாள் முதற்று அவருடைய தன்னம்பிக்கை தகர்ந்ததைப்போல் காணப்பட்டார். பற்றியிருந்த பற்றுகோல் கைநழுவிப் போனதுபோல் ஆகிவிட்டார். வாழ்வின் பற்பல நிலைமைகளில் துன்பங்களோடு தொடர்ந்து போராடி வென்றவரால் தாம் பணியோய்வு பெற்று நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓய்ந்து ஒருநாள் அமர்ந்ததில்லை. இனி மீதக்காலம் முழுமையும் வேலையின்றி அமரவேண்டும் என்றால் யார்க்குத்தான் மனம் ஒப்பும்? அந்தத் தவிப்புடனே அடுத்த பத்தாண்டுகள் ஓட்டினார். அந்தக் கவலையிலேயே உடல் நலிவுற்று இறந்தார். முப்பத்தைந்து ஆண்டுகள் ஓயாப்பணி. குடும்பப் பொருளாதாரத்தின் அச்சாணியாய் விளங்கியவர். ஓடிய ஓட்டத்துக்கு நிழலாய்க் கிடைத்த அந்த ஓய்வுக்காலமே அவர் உயிரைக் கொய்தது.
என் அத்தையார் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற மறுநாள் முதற்று அவருடைய தன்னம்பிக்கை தகர்ந்ததைப்போல் காணப்பட்டார். பற்றியிருந்த பற்றுகோல் கைநழுவிப் போனதுபோல் ஆகிவிட்டார். வாழ்வின் பற்பல நிலைமைகளில் துன்பங்களோடு தொடர்ந்து போராடி வென்றவரால் தாம் பணியோய்வு பெற்று நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓய்ந்து ஒருநாள் அமர்ந்ததில்லை. இனி மீதக்காலம் முழுமையும் வேலையின்றி அமரவேண்டும் என்றால் யார்க்குத்தான் மனம் ஒப்பும்? அந்தத் தவிப்புடனே அடுத்த பத்தாண்டுகள் ஓட்டினார். அந்தக் கவலையிலேயே உடல் நலிவுற்று இறந்தார். முப்பத்தைந்து ஆண்டுகள் ஓயாப்பணி. குடும்பப் பொருளாதாரத்தின் அச்சாணியாய் விளங்கியவர். ஓடிய ஓட்டத்துக்கு நிழலாய்க் கிடைத்த அந்த ஓய்வுக்காலமே அவர் உயிரைக் கொய்தது.


Poet Magudeswaran's analysis on Visu's 90's classic Varavu Nalla Uravu.
Be the first to comment
Add your comment

Recommended