#சனீசுவர பாதிப்புள்ளவர்கள் அன்றாடம் மாலையில், எள்விளக்கேற்றி அல்லது மாமிசக் கொழுப்பு எண்ணையில் விளக்கேற்றி சனீசுவரரின் காயந்திரி மந்தரம் 48 முறை கூறி சனீசுவரனை வேண்டிக்கொள்ள வேண்டும் இம்மந்தரத்தால், அருளுலகில் நல்ல செல்வாக்கும் பெறலாம்; பொருளுலகத் தொல்லைகளையெல்லாம் போக்கிக்கொள்ளலாம் #அங்கவியல் சாத்திர அடிப்படைகள் 32 ஆவதுபோல், விண்வெளியுலகில், இலக்கியமும்-இலக்கணமுமாக, உயிரும்-மெய்யுமாக, சொல்லும்-பொருளுமாக, சத்தியும்-சிவமுமாக, இரவும்-பகலுமாக உள்ள சனீசுவரர் 32 தோத்தர வரிகளால் பூசைசெய்யப்படுவது பதினெண்சித்தர்கள் கண்ட பூசாவிதி இதை இசையோடும் சொல்லலாம்; எப்பொழுது வேண்டுமானாலும், இருக்கும் இடத்தில் இருந்த படிச் சொல்லலாம் பாதிப்பு இல்லதவர்களும் கூறலாம். சொல்லும்போது எள்ளை ஒரு துணியில் முடிந்து, நல்லெண்ணையில் தோய்த்து, அகல் விளக்கில் எரித்திட வேண்டும் இது எல்லாவிதமான பாதிப்புகளையும் அகற்றும்; எல்லாவித பாதுகாப்புகளும் கிடைக்கும் அனைவரும் தங்களுக்குள்ள சனீசுவரப் பாதிப்புகளை அகற்றிக்கொள்ள 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்களால் இந்த சனீசுவரக் #காயந்திரி மந்தரம் சனீசுவரத் தோத்தரம் வழங்கப்படுகிறது
!!ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் !! ================== "சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது. ================== இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)
Be the first to comment