இரண்டரை வயதுக் குழந்தை மீதும் -பிறத்தியாள்VDO-
  • 13 years ago
ஈழத்தமிழ் அகதியின் இரண்டரை வயதுக் குழந்தை மீதும் தமிழ்நாட்டில் பாலியல் பலாத்காரம்!

தமிழ்நாடு புதுப்பட்டு அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் அகதியின் இரண்டரை வயதுக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமொன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி அந்த முகாமில் உள்ள சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சென்னையில் மனிதம் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர்களான ரகுநாதன், தேவதர்சினி தம்பதிகளின் இரண்டரை வயதுடைய இரண்டாவது குழந்தை மீது நேற்று முன்தினம் இரவு முதலியார் குப்பத்தை சேர்ந்த 23 வயதான சுகுமாரன் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஈழத்தமிழ் அகதிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=23831&Itemid=410
Recommended