அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக தொண்டர்களும், சண்முகத்தின் ஆதரவாளர்களும் திரண்டு வந்து இன்று அதிரடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தவெக (TVK) தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, எடப்பாடி கே. பழனிசாமி (EPS) இந்த நீக்க நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள், ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்து இபிஎஸ்-க்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க நினைவிடப் பகுதியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Comments