நீலகிரி: குன்னூர் அருகே சாலையோரக் கடையை சேதப்படுத்திய யானை அங்கிருந்த பலாப்பழங்களை ருசி பார்த்து சென்றது.நீலகிரி மாவட்டம் அடந்த வனப்பகுதி என்பதால் கரடி, சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். இவை தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கமாகி வருகிறது. குறிப்பாக, யானைகள் அதிகளவில் உலா வருவதால், குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.இந்த நிலையில், பலாப்பழம் சீனன் தொடங்கியுள்ளதால், காட்டு யானைக் கூட்டங்கள் மலைப்பாதையில் உள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளது. தோட்டங்களில் புகுந்து பலா மரங்களில் உள்ள பழத்தை சாப்பிட அவ்வப்போது வந்து செல்கிறது.இதுபோன்ற சூழலில், குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இச்சிமரம் அருகே சாலையோர கடையில் பலாப்பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த வாடைக்கு வந்த ஒரு காட்டு யானை, கடையை சூறையாடி அங்கிருந்த பலாப்பழத்தை ருசி பார்த்தது. இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவிட்டு, சமூகவலைத்தளத்தில் பதிவிட்டனர். தற்போது, யானை பலாப்பழத்தை சாப்பிடும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.இதனால், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் எனவும், சாலையோர கடைகளில் பலாப்பழத்தை விற்பனை செய்யக் கூடாது எனவும், பழங்குடியின மக்கள் இரவு நேரங்களில் வீடுகளிலிருந்து வெளியே வரவேண்டாம் எனவும், காட்டு யானைகளைக் கண்டவுடன் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Comments