Skip to playerSkip to main content
  • 8 minutes ago
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றான புகழ் பெற்ற மாசித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதற்காக இன்று அதிகாலை 1.00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூபம் தீபாராதனையும், 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து காலை 5.00 மணிக்கு செப்புக் கொடி மரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. மேலும் பல்வேறு வாசனை திரவியங்கள் மட்டுமல்லாது பால், பழம், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் 12 நாட்கள் நடைபெறக்கூடிய இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வானது நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Category

🗞
News
Transcript
00:00Shankaram, namamimu, manasasirasa, nata, tanumanisham
00:31Shankaram, namamimu, manasirasa, nata, tanumanisham
00:40Shankaram, namamimu, manasirasa, nata, tanumanisham
01:09Shankaram, namamimu, manasirasa, nata, tanumanisham
01:22Shankaram, namamimu, manasirasa, nata, tanumanisham
Comments

Recommended