டி.டி.வி.தினகரன் குறித்து பேச வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார், மீடியா வெளிச்சத்துக்காக டி.டி.வி.தினகரன் எடப்பாடி குறித்து விமர்சனம் செய்கிறார், மீடியா வெளிச்சம் இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் டி.டி.வி - ஐ மறந்து விடுவார்கள், டிடிவி தினகரன் டெல்டா மாவட்டங்களில் மண்ணின் மைந்தனாக இருக்கிறார், டெல்டாவில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாததால் பாதிக்கப்பட்டு உள்ளனர், ஆகவே, டிடிவி தினகரன் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று மக்கள் பணியில் கவனம் செலுத்தி பேச வேண்டும், போகாத ஊருக்கு வழி சொல்வதைப் போல டிடிவி தினகரனின் பேச்சுக்கள் ஆகாதது போகாதது போல உள்ளது, டிடிவி தினகரன் மக்கள் பணிகளை முதலில் செய்யட்டும் பின்னர் மக்கள் தலைவர் குறித்து பேசட்டும், டிடிவி தினகரனுக்கு ஊடக வெளிச்சம் இருப்பதால் போவோர் வருவோரை ஆபாசமான வார்த்தைகளில் பேசுகிறார், டிடிவி தினகரனின் பேச்சால் மக்களுக்கு எந்த ஒரு நல்லதும் நடைபெறாது அவருடைய கதை முடிந்த கதை, மருந்தின் Expiry Date க்கு முன்னாள் மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகும், Expiry Date க்கு பின்னால் மருந்து சாப்பிட்டால் அது விஷமாகும், மருந்து வேண்டுமா? விஷம் வேண்டுமா? என மக்கள் முடிவெடுத்து கொள்ள வேண்டும், டி.டி.வி.தினகரன் Expiry Date அரசியல்வாதியாக உள்ளார், அவரை பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம், என்று மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Be the first to comment